ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை அடுத்து, ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஈரானைப் பாதுகாக்க தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக இந்த கணம் வரை 1.4 கோடிக்கும் அதிகமான பெருமைமிக்க ஈரானியர்கள் பதிவு செய்துள்ளனர். நானும் ஈரானுக்காக உயிர்த் தியாகம் செய்ய எந்தக் காலத்திலும் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படை மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் ஈரானில் இதுவரை 2,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க ராணுவ தரப்பில் 13 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். சுமார் 700 அமெரிக்க வீரர்கள் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 7,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேற்கு ஆசியாவில் நீடிக்கும் போரால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
