இந்திய பங்குச் சந்தையில் தனிநபர் அல்லது சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்தது, கடந்த நிதியாண்டில் 5 மடங்கு அளவுக்கு சரிந்துள்ளது. பங்குகளின் விலை மீதான அதிக மதிப்பீடு, நிறுவனங்களின் லாபம் குறைந்தது, போர் உள்ளிட்ட புவிசார் அரசியல், பொருளாதார பதற்றங்கள் போன்ற காரணங்களால், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதையும் இது காட்டுகிறது.
ஈக்விட்டி வர்த்தகத்தில் ஆர்வம் குறைந்தாலும், அதிக ரிஸ்க் கொண்ட முன்பேர வர்த்தக பிரிவில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
