மேகமலையில் வசிக்கும் மக்களை வெளியேற்ற எதிர்ப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள தும்மக்குண்டு, மேகமலை உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 98 மலைக் கிராம மக்களை வன ஆக்கிரமிப்பாளர்கள் என்று உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியேற்றும் நடவடிக்கை நடந்து வருகிறது.

இதனைக் கைவிடக் கோரியும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு செய்ய வேண்டியும், பல தலைமுறைகளாக வசிக்கும் மேகமலை மலைவாழ் மக்களுக்கு 2006 வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கடமலை – மயிலை ஒன்றியத்தில் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.தேநீர் கடைகள், பலசரக்கு கடைகள், உணவகங்கள், என அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட கடமலை – மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில் உள்ள வணிகர்கள் மேகமலை மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம் போல இயங்குகிறது.

Source link