மேற்கு வங்க நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பின் சூத்திரதாரி – ஒவைசி கட்சித் தலைவர் கைது

இரவு 1 மணியளவில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களைக் கலைத்து, நீதித்துறை அதிகாரிகளை மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களின் வாகனம் மீது கற்கள் வீசப்பட்டன. இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசை சாடிய உச்சநீதிமன்றம், அதிகாரிகள் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிலைநிறுத்த உத்தரவிட்டது.

இந்த சூழலில் மக்கள் போராட்டத்தை வழிநடத்தி நீதித்துறை அதிகாரிகளை சிறைபிடித்ததில் முக்கிய பங்கு வகித்ததாக ஓவைசி உடைய ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த தலைவர் மொஃபக்கேருல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர் மொஃபக்கேருல் இஸ்லாம், 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இத்தாஹர் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார்.

இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அவர் நிலத்தை விட்டு வெளியேற முயன்றபோது பாக்டோக்ரா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Source link