புதுடெல்லி: மேற்கு வங்க மக்கள் பல நூற்றாண்டுகளாக மீன் உணவுக்குப் பழகி விட்டனர். மேலும், காளி, துர்கா உள்ளிட்ட கடவுள்களுக்கும் மீன் உணவுகளைப் படைக்கின்றனர். அங்கு மீன் உணவை சைவமாகக் கருதி உண்ணும் பிராமணர்களும் அதிகம். இந்த மீன் உணவு தேர்தல் பிரச்சாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
இது குறித்து, முதல்வர் மம்தா பிரச்சாரத்தில் பேசுகையில், “பாஜக ஆட்சிக்கு வந்தால், வங்காள மக்களின் உணவுப் பண்பாடு, குறிப்பாக நமக்கு மிகவும் பிடித்தமான மீன் மற்றும் இறைச்சி உண்ணுவதைத் தடை செய்து விடுவார்கள்” என்றார். இதே கருத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களும் மீன் உணவைப் பயன்படுத்தி பாஜகவை விமர்சிக்கின்றனர்.
