இந்தப் பாடலுக்குப் பிறகுதான் ‘காதல் கப்பல்’ பாடலும் ரீல்ஸ்களில் டிரெண்டானது.” என்றவர், “‘மைனரு வேட்டி கட்டி’ பாடலுக்கு முதலில் தெலுங்கு வெர்ஷனைதான் தயார் செய்தார்கள். அதைக் கேட்டப் பிறகுதான் நான் தமிழில் எழுதினேன். தமிழ் வெர்ஷன் பெரியளவில் ஹிட்டான பிறகு தெலுங்கில் பாடகி தீ பாட, மீண்டும் இந்தப் பாடலை ரெக்கார்ட் செய்தார்கள்.
இந்தப் பாடலுக்கு, வரிகளின் சவுண்டு மிக முக்கியமானதாக அமைந்தது எனலாம். ‘மைனரு வேட்டி கட்டி’, ‘மச்சினி’, ‘மனசுல அம்பு’ என இந்தப் பாடலுக்கு பல சவுண்டான வார்த்தைகள் அமைந்துவிட்டன. அது இந்தப் பாடல் இத்தனை வைரலானதற்கு ஒரு காரணம் என்பேன்.
சொல்லப்போனால், ரெக்கார்டிங் சமயத்திலேயே இந்தப் பாடல் நன்றாக வரும் என வாழ்த்தினார்கள். சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி ரெக்கார்டிங்கின் போதே வரிகளை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு வாழ்த்தினார். திரைத்துறையைச் சார்ந்தப் பலரும், இதுதான் அவர்களுடைய ப்ளேலிஸ்டில் இப்போது ரீப்பீட் ஆக ஓடிக் கொண்டிருக்கும் பாடல் எனச் சொல்லி வாழ்த்தினார்கள்.
