ராகவ் சத்தாவிடம் இருந்து மாநிலங்களவை கட்சித் துணைத் தலைவர் பதவியை பறிக்க ஆம் ஆத்மி நடவடிக்கை

புதுடெல்லி: மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தாவை நீக்கக் கோரி, மாநிலங்களவை செயலகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

ராகவ் சத்தாவுக்குப் பதில், பஞ்சாபைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அசோக் மிட்டல் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் 10 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஏழு பேர் பஞ்சாபில் இருந்தும், மூன்று பேர் டெல்லியில் இருந்தும் தேர்வாகி உள்ளனர்.

இந்நிலையில், பஞ்சாபில் இருந்து தேர்வாகிய ராகவ் சத்தாவை மாநிலங்களவையில் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அதே மாநிலத்தில் இருந்து தேர்வாகிய மற்றொரு உறுப்பினரான அசோக் மிட்டலை அப்பதவிக்கு நியமிக்க கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

Source link