ராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்த ராஜேந்திர பாலாஜி, 3,898 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றார். சிவகாசியில் போட்டியிட்டிருந்தால்கூட வெற்றி பெற்றிருக்கலாம் என அப்போது ராஜேந்திரபாலாஜி வருத்தப்பட்டதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பின்பும் தொகுதியை சுற்றி வந்த ராஜேந்திர பாலாஜி மீண்டும் ராஜபாளையம் தொகுதியில்தான் களமிறங்குவேன் எனக் கூறி வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாக ராஜபாளையத்துக்கு பதிலாக சிவகாசியில் கவனம் செலுத்த தொடங்கினார்.
நலத்திட்ட உதவிகளை வழங்குவது, பொங்கல் பரிசு, இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, அவர் தொகுதி மாறுவது உறுதி என அதிமுகவினர் கூறி வந்தனர்.
