புதுடில்லி: ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியில், திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக்,54, போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தமிழகம் உட்பட 5 மாநில ராஜ்யசபா வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது.
ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள். இன்றைக்குள் தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்களை தேர்தல் கமிஷன் நாளை பரிசீலிக்கிறது. இந்நிலையில் தமிழகம் உட்பட 5 மாநில ராஜ்யசபா வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது.
யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?
* தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு கிறிஸ்டோபர் திலக் செல்கிறார். திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்து வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.
மேலும் 4 மாநில வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
* தெலங்கானா- அபிஷேக் மனு சிங்வி, வேம் நரேந்தர் ரெட்டி.
* சத்தீஸ்கர்- பூலோ தேவி நேதம்
* ஹரியாணா – கரம்வீர் சிங் பவுத்,
* ஹிமாச்சல பிரதசேம்- அனுராக் சர்மா
ஆகியோரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
