ராமதாஸ் மனுவுக்கு அன்புமணி பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு- Court orders Anbumani to respond to Ramadoss’ petition

சென்னை:

பா.ம.க. மாம்பழ சின்னத்தையும், கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றையும், அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கவேண்டும். தன்னை கட்சியின் தலைவராக அறிவிக்க கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கிற்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை உரிமையியல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று ராமதாஸ் மனுதாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் உரிமையியல் நீதிமன்றம் அந்த வழக்கை 3 நாட்களுக்குள் விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Source link