ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சியினர்
வழங்கிய வேலை வாங்க மறுத்து திருப்பி கொடுத்த உதயநிதி, மற்றொருவர் கொடுத்த
புத்தர் சிலையை பெற்றுக்கொண்டார்.
ராமநாதபுரம்
அரண்மனை பகுதியில் துணை முதல்வர் உதயநிதி நேற்று இரவு ஓட்டு சேகரித்தார்.
பேசி முடித்த பின் அவருக்கு கட்சி நிர்வாகிகள் பரிசு பொருட்களை வழங்கினர்.
அதில் ஒருவர் வேல் வழங்கிய போது, அதை வாங்கி அவரிடமே திரும்ப கொடுத்தார்.
அடுத்த நிமிடமே மற்றொரு நிர்வாகி புத்தர் சிலையை வழங்கியதும் மகிழ்ச்சியோடு
வாங்கிக் கொண்டார். இது அங்கிருந்தவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக
பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வந்த உதயநிதியின் காரை அச்சுந்தன்வயல்
சோதனை சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
