ராமேஸ்வரம்: ஞாயிறு, வியாழன், வெள்ளிக்கிழ மைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதிக்கும், திங்கள், வெள் ளி, சனிக்கிழமைகளில் திருப்பதியில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் என வாரத்திற்கு மூன்று நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் ஏராளமான பக்தர்கள் பயணிப்ப தால் டிக்கெட் கிடைக்காமல் பல்வேறு வாகனங்களில் திருப்பதி, ராமேஸ்வரம் செல்கின்றனர்.
போக்குவரத்து தேவை கரு தி இவ்வழித்தடத்தில் கூடுதலாக ரயில் இயக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
அதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அவருக்கு அனுப்பிய கடிதத்தில், ‘ராமேஸ்வரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் மேலும் ஒருநாள் கூடுதலாக இயக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். அதன்படி இந்த வழித்தடத்தில் விரைவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
