லக்னோ: உ.பி .,யின் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகினி, 27. இவர், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில், ‘ரீல்ஸ்’ எனப்படும், குறும் வீடியோக்களை பதிவேற்றி வந்தார்.
அதற்காக பிரபலமான சினிமா காட்சிகள் பலவற்றை மோகினி மீண்டும் நடித்து வெளியிட்டு வந்தார்.
சமீபத்தில், துாக்கில் தொங்கும் காட்சியை வீடியோ எடுப்பதற்காக, தன் வீட்டு அறையில் உள்ள மின்விசிறியில் கயிறு கட்டி, அதை தன் கழுத்தில் மாட்டியுள்ளார். அப்போது கால் தடுமாறி கீழே இருந்த ஸ்டூல் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனால், கழுத்தில் மாட்டியிருந்த கயிறு இறுகியதில், அவர் மூச்சுத்திணறி மயங்கினார்.
சத்தம் கேட்டு வந்த வீட்டினர், அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்ததாக அறிவித்தார்.
ரீல்ஸ் மோகத்தால் இளம் பெண் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
