4 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 4 லட்சம் தேர்தல் பணியாளர்களை உள்ளடக்கிய பல்வேறு அலுவலர்களுக்கு விரிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 6,803 மண்டல அதிகாரிகள், 75,032 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 2,25,096 வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து நிலைகளிலும் உள்ள தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் முறையாகப் பயிற்சி பெற்று, தேர்தலை சுதந்திரமான, நியாயமான மற்றும் திறமையான முறையில் நடத்துவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதே இந்தப் பயிற்சித் திட்டத்தின் நோக்கம் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
