தமிழ் திரை உலகில் வில்லன் நடிகராக மக்களை கவர்ந்து வருபவர் மன்சூர் அலிகான். அவரது யதார்த்தமான பேச்சும், இயல்பான நடிப்பும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் அவருக்கென தனி இடம் இருந்து வருகிறது.
மன்சூர் அலிகான் நடிகராக மட்டுமின்றி இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அவரது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி திருச்சி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. லால்குடியில் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் லீமா மார்ட்டின் போட்டியிடுகிறார்.
தேர்தலில் போட்டியி டுவது குறித்து மன்சூர் அலிகான் கூறியதாவது:-
