லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்து; அகதிகள் 53 பேர் பலி

திரிபோலி: லிபியாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அகதிகள் 53 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் இருந்து, சமீபத்தில் 55 பேர், ரப்பர் படகில் ஐரோப்பாவில் அடைக்கலம் சேர புறப்பட்டனர். மத்திய தரைக்கடலில் சென்றபோது, லிபியாவுக்கு அருகில் ஜுவாரா என்ற இடத்தில் படகு கவிழந்தது.

இதில், 2 குழந்தைகள் உட்பட, 53 பேர் உயிரிழந்தனர். இரண்டு பெண்கள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்துக்கு, அதிக எடை காரணமாக நிகழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link