இந்தச் சம்பவத்தை கேரள அரசு மாநில பேரிடராக அறிவித்து நிவாரண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. கேரள அரசு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடம் ரூ.9,531 கோடி இழப்பீடு கோரியுள்ளது.
எனவே, லைபீரிய கப்பல் கவிழ்ந்ததால் கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை கணக்கிடவும், கடற்கரை பகுதியில் படிந்துள்ள எண்ணெய், பிளாஸ்டிக் துகள்களை அகற்றவும் நிபுணர் குழு அமைக்க வேண்டும்.
கப்பல் உரிமையாளரிடமிருந்து இழப்பீடு வசூலிக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 29-க்கு தள்ளிவைத்தனர்.
