லைபீரிய கப்பல் மூழ்கியதால் பல மாவட்ட கடற்கரைகளில் படிந்த பிளாஸ்டிக் கழிவை அகற்ற வழக்கு

இந்தச் சம்​பவத்தை கேரள அரசு மாநில பேரிட​ராக அறி​வித்து நிவாரண நடவடிக்​கை மேற்​கொண்டு வரு​கிறது. ஆனால் தமிழக அரசு நிவாரண நடவடிக்​கைகளை மேற்​கொள்​ள​வில்​லை. கேரள அரசு சம்​பந்​தப்​பட்ட கப்​பல் நிறு​வனத்​திடம் ரூ.9,531 கோடி இழப்​பீடு கோரி​யுள்​ளது.

எனவே, லைபீரிய கப்​பல் கவிழ்ந்​த​தால் கன்​னியாகுமரி, ராம​நாத​புரம், தூத்​துக்​குடி, நெல்​லை, தஞ்​சாவூர், புதுக்​கோட்டை மாவட்​டங்​களில் ஏற்​பட்​டுள்ள சுற்​றுச்சூழல் பாதிப்பை கணக்கிட​வும், கடற்​கரை பகு​தி​யில் படிந்​துள்ள எண்​ணெய், பிளாஸ்டிக் துகள்​களை அகற்றவும் நிபுணர் குழு அமைக்க வேண்டும்.

கப்​பல் உரிமையாளரிட​மிருந்து இழப்​பீடு வசூலிக்க நடவடிக்கை எடுக்​க​வும் தமிழக அரசுக்கு உத்தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனுவை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு விசா​ரித்​து, மனு தொடர்​பாக மத்​திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை ஏப். 29-க்கு தள்​ளி​வைத்​தனர்.

Source link