வண்டியை வித்தா மட்டும் போதாது! 47 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட கோர்ட்.. நடந்தது என்ன?

இருப்பினும், தான் அந்த வாகனத்தை ஷப்ரேஸ் என்பவருக்கு விற்றுவிட்டதாக குமார் தரப்பில் வாதிடப்பட்டது; ஆனால் ஷப்ரேஸ் அந்த விற்பனை நடந்ததையே மறுத்தார்.

இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடும்போது, ​​உயிரிழந்தவர் தாக்கல் செய்த வருமான வரி விவரங்களின் அடிப்படையில், அவரது சராசரி ஆண்டு வருமானத்தை (ரூ. 2.9 லட்சம்) கணக்கில் எடுத்துக்கொண்டதில் தீர்ப்பாயம் தவறிழைத்துவிட்டதாக உயர்நீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியது. வருமானத்தில் படிப்படியான உயர்வு இருந்திருந்து, விபத்து நிகழ்வதற்கு முன்பாகவே அந்த வருமான வரி விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அதிகபட்ச வருமானத்தைக் காட்டும் சமீபத்திய வருமான வரி விவரத்தையே இழப்பீட்டைக் கணக்கிடுவதற்கான அடிப்படையாகக் கொள்ளலாம். இழப்பீட்டைக் கணக்கிடுவதற்கு, நிலையான வருமானமே அடிப்படையாக அமைய வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம் என்று அந்த அமர்வு தெரிவித்தது.

எனவே தான் தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை விட கூடுதலாக ரூ. 14 லட்சம் உயர்த்தி வழங்கியதாக, ​​அமர்வு நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ஹனுமந்தாவின் குடும்பத்தினர் மற்றும் ஷப்ரேஸ் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் பகுதியளவு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், குமார் தாக்கல் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

Source link