வாக்குச்சாவடிகளில் இது மட்டும் நடந்தால் தேர்தல் அதிகாரி மறுவாக்கெடுப்புக்கு பரிந்துரைக்கலாம்..!

அதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல்களில், வாக்குச்சாவடிகளின் உள்ளேயும், வெளியேயும் இணைய வழி ஒளிபரப்புக்கு(வெப் காஸ்ட்) (Internet Streaming/Broadcasting) ஏற்பாடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. இணைய ஒளிபரப்பு என்பது வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு செயல்முறையை கண்காணிக்கும் தேர்தல் ஆணையத்தின் உள் ஏற்பாடாகும்.

அத்துடன் வாக்குச்சாவடிகளில் இணைய ஒளிபரப்பு வேண்டுமென்றே தடை செய்யப்பட்டால், அங்கு மறுவாக்குப்பதிவை பரிந்துரைக்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு அறிவுறுத்தலையும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

ஏனெனில் தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களால் வாக்குச்சாவடிகளில் இடையூறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால், அத்தகைய நிகழ்வுகளை கையாள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு வாக்குச்சாவடியில் இணையவழி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதில் தீய நோக்கம் இருப்பதாக தேர்தல் அதிகாரிக்கு உறுதியாக தெரியவந்தால், ‘ஒத்தி வைப்பு தேர்தல்’ அறிவுறுத்தலின் கீழ் மறுவாக்குப்பதிவை பரிந்துரைத்து தேர்தல் ஆணையத்திடம் சூழ்நிலையை விளக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Source link