வாஷிங்டன்: மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருவதையடுத்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி உட்கட்டமைப்பு,

வாஷிங்டன்: மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருவதையடுத்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி உட்கட்டமைப்பு, சுற்றுலாத் துறை மற்றும் பாதுகாப்பு வரவு – செலவு திட்டங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது.

மறுபரிசீலனை இதையடுத்து, பிரிட்டனில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா உடனான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய துவங்கியுள்ளன.

இது குறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘பைனான்சியல் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், இந்த நான்கு நாடுகளும் அமெரிக்கா உடனான தற்போதைய மற்றும் வருங்கால ஒப்பந்தங்கள் குறித்து தங்கள் உள்நாட்டு ஆய்வை துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்போதைய போர் சூழலை ஒரு எதிர்பாராத பேரிடராக கருதி, ஒப்பந்தங்களில் உள்ள ‘போர்ஸ் மஜூர்’ எனும் தவிர்க்க முடியாத சூழல் என்ற சட்டப் பிரிவை பயன்படுத்தி, ஒப்பந்தங்களில் இருந்து விலக முடியுமா என ஆராய்ந்து வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியதாலும், எரிசக்தி மையங்கள் மீதான தாக்குதல்களாலும் வருவாய் குறைந்துள்ளது மற்றும் ஈரான் ஏவுகணைகளை இடைமறிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது போன்ற காரணங்களே இந்நாடுகளின் இம்முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நாடுகள் உலகின் மிகப்பெரிய அரசு முதலீட்டு நிதி நிறுவனங்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது, அமெரிக்காவில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்தார்.

அழுத்தம் இப்போது இந்த முதலீடுகள் ரத்து செய்யப்பட்டால், அது அமெரிக்க பொருளாதாரத்திலும் உலக சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும், அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் இருந்து இந்நாடுகள் விலகுவது, ஈரானுடனான போரை நிறுத்த அமெரிக்காவுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Source link