முன்புற இருக்கைகள் மற்றும் கால்களை நீட்டி அமர்வதற்கான கூடுதல் இட வசதி போன்ற வசதிகளுக்காகவே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு இட்ட 60% இலவச இருக்கைகள் உத்தரவை தற்போது திரும்பப் பெற்றுள்ளது.
விமானப் போக்குவரத்து ஒழுங்கு முறை அமைப்பான டிஜிசிஏ-வால் வெளியான இந்த உத்தரவு ஏப்ரல் 20-ம் தேதி முதல் அமலுக்கு வரவிருந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு விமான நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தன.
இந்நிலையில், தனது அறிவிப்பை டிஜிசிஏ திரும்பப் பெற்றுக் கொண்டது. எனவே, விமானங்களில் விருப்ப இருக்கைகளுக்கான பழைய விதிமுறை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
