கன்னியாகுமரியில் மகதானபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அறிவித்த திட்டங்கள் வருமாறு:
வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்.
ரேஷன் கார்ட் போன்றவை உங்கள் மொபைலிலேயே இருக்கும்.
லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் சென்று சேரும்.
அரசின் திட்டங்களைப் பெற தன் அடையாள அட்டை தரப்படும்.
6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை திட்டம் உருவாக்கப்படும்.
மக்களின் மனுக்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்படும்.
தமிழ்நாடு ஏஐ டிஜிட்டல் தலைநகராக மாறும் என அறிவித்தார்.
