வேலூர்: வே லுார் மாவட்டத்தில், வேலுார், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம் தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அ.தி.மு.க., வேட்பாளர்களை தோற்கடிக்க அமைச்சர் வேலு சார்பில், பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் ரகசிய பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியதாவது:
வேலுார் மாவட்டத்தில் தி.மு.க.,வை வெற்றி பெற வைக்க, அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி வருகிறார் அமைச்சர் வேலு. அணைக்கட்டு, காட்பாடி தொகுதிகளில் பா.ம.க., ஓட்டு வங்கி, அ.தி.மு.க., கூட்டணிக்கு செல்லக்கூடாது. பணம் வினியோகம் செய்தாலும், முழுமையாக செலவு செய்யாதீர்கள் என முன்னாள் பா.ம.க., – எம்.எல்.ஏ.,வும், தன் ஆதரவாளருமான முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் வாயிலாக, பா.ம.க., நிர்வாகிகளிடம், வேலு பேச்சு நடத்தி உள்ளார். அவருக்கும் சேர்த்து பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
