வே லை இல்லாத இளைஞர்களுக்கு 2,000 – 4,000 ரூபாய் கொடுக்கிறோம் என்பதை விட, அப்பணத்தை வைத்து நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவது தான் வளர்ச்சி.
இவ்வாறான வளர்ச்சியை தரும் தலைவர்களை நாம் தேர்வு செய்வதில்லை; இலவசங்களையும், வெற்று அறிவிப்புகளையும் கொடுத்து ஏமாற்று பவர்களை தான் தேர்வு செய்கிறோம்.
ஆட்சியாளன் தவறான, அநீதியான, கொடுமையான ஆட்சி செய்தால் அவன் மட்டும் பொறுப்பல்ல; அவனது குற்றம் மட்டும் பொறுப்பல்ல; ஆட்சியில் அமர வைத்த மக்களும் குற்றவாளிகள்.
குற்றம் செய்தவருக்கே மீண்டும் ஓட்டளிப்பது தான் பெரிய குற்றம். இவற்றை நான், 15 ஆண்டுகளாக உங்களிடம் பேசுவதற்கு பதிலாக சுடுகாட்டில் கத்தியிருந்தால், 10 பிணமாவது எழுந்து வந்து, என்னய்யா உன் பிரச்னை என்று கேட்டிருக்கும். இப்படி பேசி, 36 லட்சம் பேரை உசுப்பேற்றி வைத்துள்ளேன். இம்முறை எத்தனை பேருக்கு சூடு, சொரணை, மானம், ரோஷம் உள்ளிட்டவை இருக்கிறது என்று பார்ப்போம்.
