ஷார்ஜா : ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி, துபாய், ஷார்ஜா என பல்வேறு பகுதிகளிலும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. அபுதாபியின் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடந்தது.
கோர்பக்கான் துறைமுகம் மீது தாக்குதல்
இந் நிலையில் ஷார்ஜாவின் கோர்பக்கான் துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஈரான் தாக்குதல் காரணமாக இதுவரை இந்தியாவைச் சேர்ந்தவர் உள்ளிட்ட 13 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 217 பேர் காயமடைந்துள்ளனர்.
