ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தைப் பொறுத்தவரை, வரும் நாட்களில் இங்கிலாந்துடன் இணைந்து நாங்கள் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்யவுள்ளோம்.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட, அமைதி சார்ந்த ஒரு பன்னாட்டுப் பணியில் எங்களுடன் இணைந்து பங்களிக்கத் தயாராக இருக்கும் நாடுகளை இம்மாநாடு ஒன்றிணைக்கும்.
இந்த மோதலில் ஈடுபட்டுள்ள போரிடும் தரப்பினரிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட, தற்காப்பு நோக்கத்தை மட்டுமே கொண்ட இப்பணியானது, சூழ்நிலைகள் அனுமதித்த உடனேயே, களத்தில் செயல்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவம், ஈரான் துறைமுகங்களுடன் தொடர்புடைய கடல்வழிப் போக்குவரத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்ததுடன், ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையிடப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பதற்றத்துக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
