ஹெச் .டி.எப்.சி., தனது லாக்கர் வாடகை கட்டணங்களை வரும் ஏப்., 1ம் தேதி முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ‘மெட்ரோ பிளஸ்’ என்ற புதிய கிளை பிரிவை அறிமுகம் செய்து, அதில் துவங்கப்படும் லாக்கர் கணக்குகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மெட்ரோ நகரங்களில் மீடியம் சைஸ் லாக்கர் வாடகை, ஆண்டுக்கு 4,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயரக்கூடும். இது கிட்டத்தட்ட 184 சதவீதம் வரையிலான உயர்வாகும். அடிப்படை கட்டணங்களுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
