நேரில் சந்திக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்ததால், ரோகித் தனது வீட்டு முகவரியைப் பகிர்ந்தார். அடுத்த நாள் அவரது இல்லத்திற்குச் சென்ற சுமார் 2 மணிநேரம் கிரிக்கெட் மற்றும் ஆட்ட நுணுக்கங்கள் குறித்து பேசினோம். எனது முன்மாதிரி எனக்கு இவ்வளவு நேரம் ஒதுக்கியது ஒரு கனவு போல இருந்தது. அந்த இரண்டு மணிநேரம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. அது உண்மையிலேயே ஒரு மிகச் சிறந்த அனுபவமாக அமைந்தது என மாத்ரே கூறினார்.
இந்தச் சந்திப்பின் போது, ரோகித் சர்மா தனது கையொப்பமிட்ட பேட்டை பரிசாக வழங்கி வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
