254 பேர் கொலை.. லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்ததில் இருந்து விலகுவோம் – ஈரான் எச்சரிக்கை

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்கு பிறகு, நேற்று (புதன்கிழமை) மத்திய பெய்ரூட்டில் உள்ள பரபரப்பான வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் முன் அறிவிப்பின்றி நடத்தப்பட்டன.

இதில் குறைந்தது 254 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் லெபனான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தாக்குதல்கள் தொடர்ந்தால், ஒப்பந்தத்திலிருந்து விலக வேண்டியிருக்கும் என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலிய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்வது தடுக்கப்பட்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கள் அனுமதியின்றி ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் எந்தக் கப்பலையும் அழித்துவிடுவோம் என்று புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கவும் ஈரான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Source link