398 காஸ் சிலிண்டர்கள் பதுக்கல் மதுரையில் இருவருக்கு குண்டாஸ் தமிழகத்தில் முதன்முறை

மதுரை: ஈரான் போர் காரணமாக இந்தியாவில் காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவும் நிலையில், மதுரையில் விற்பனை செய்வதற்காக சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இருவர் தமிழகத்திலேயே முதன்முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

மதுரை உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் பழனி 46, என்பவர் வீட்டருகே சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 100 மானிய காஸ் சிலிண்டர்கள், 109 வர்த்தக காஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

அதே பகுதியில் மதன்குமார் 27, என்பவர் இடத்தில் 63 மானிய காஸ் சிலிண்டர்கள், 189 வர்த்தக காஸ் சிலிண்டர்கள் என மொத்தம் 398 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின்கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது காஸ் தட்டுப்பாடு நிலவும் சூழலில் தமிழகத்திலேயே முதன்முறையாக இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மதுரை கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்டார்.

Source link