இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக குன்னூரில் இருந்து ஊட்டிக்கு பழமை மாறாமல் உள்ள நீராவி இன்ஜின் கொண்ட மலை ரெயிலில் பயணம் மேற்கொண்டனர்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இன்ஜின் ரெயில் பெட்டியுடன் இணைத்து பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த மலை ரெயிலை ஆங்காங்கே நிறுத்தி இதில் வந்த ஜெர்மன் நாட்டு பயணிகள் நூற்றாண்டும் கடந்தும் கம்பீரமாக உள்ள பாலங்கள், குகைகள், இயற்கை காட்சிகளை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர்.
