கூட்டணியில் தேமுதிக இணைந்தது பெருமகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்தது பெருமகிழ்ச்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: கருணாநிதி மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதாவையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.

கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு, நல்லுறவு தொடர்ந்து தமிழகத்தின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும். திமுக ஆட்சி தொடரவும், தமிழகம் அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Source link