'காப்பீட்டு துறை பிரீமியம் 6.90% வளர்ச்சி பெறும்'

இ ந்தியாவின் காப்பீட்டுத்துறை, உலகிலேயே வலுவானதாக மாறும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிறுவனங்களின் பிரீமியம் வசூல் 6.90 சதவீதம் வளர்ச்சி காணும் எனவும் காப்பீட்டுத்துறை நிறுவனமான ‘ஸ்விஸ் ரீ’ தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்தாண்டு இந்திய காப்பீட்டு துறை பிரீமியம் வசூல் 3.10 சதவீதம் வளர்ச்சி கண்டது. ஆனால், 2026 – 2030 காலகட்டத்தில், வளர்ச்சி 6.90 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சியில் சீனா, அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய சந்தைகளை இந்தியா பின்னுக்கு தள்ளும். வலுவான பொருளாதார அடித்தளம் இருப்பது, காப்பீட்டுக்கு உயர்ந்துவரும் தேவை, அதிகரிக்கும் விதிமுறைகள் ஆகியவையே இதற்கு காரணம்.

ஜி.எஸ்.டி.,யை எளிமைப்படுத்தியது, தனிநபர் வருமான வரி சலுகைகள் ஆகியவற்றின் விளைவாக, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட குடும்பங்களின் காப்பீடு தேவை அதிகரிக்கும். மேலும் காப்பீட்டுத்துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்து உள்ளதும் இதற்கு காரணம்.

Source link