நடராஜர் கோவிலில் கவர்னர் தரிசனம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், கவர்னர் ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்றார். முன்னதாக அவர், தனது மனைவி லக்ஷ்மியுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு, பொது தீட்சிதர்கள் பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். தொடர்ந்து, சித்சபையில் வீற்றிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராஜரை கவர்னர் தரிசனம் செய்தார்.

கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில், கவர்னர் மற்றும் அவரது மனைவி இருவரையும் சித்சபை அருகில் அமர வைத்து சங்கல்பம் செய்தனர். அவருக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் வருகை பதிவேட்டில், கவர்னர் கையெழுத்திட்டார்.

Source link