இரண்டு மடங்காக அதிகரித்த நகை கடன் பங்களிப்பு

புதுடில்லி: வங்கிகள் அளித்த சில்லரை கடன்களில், நகைக்கடனின் பங்களிப்பு, கடந்த ஜனவரியில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட ஒட்டுமொத்த சில்லரை கடன்களில் நகைக்கடனின் பங்களிப்பு, கடந்த, 2025 ஜனவரியில் 3 சதவீதமாக இருந்தது.

இது, நடப்பாண்டு ஜனவரியில் இரட்டிப்பாகி, 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை வெகுவாக உயர்ந்ததால், நகைக்கடன் மதிப்பு, ஆண்டு ஒப்பீட்டில் 128.80 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.

மொத்த சில்லரை கடன் 2025 ஜனவரி ரூ. 58.51 லட்சம் கோடி 2026 ஜனவரி ரூ. 67.23 லட்சம் கோடி வளர்ச்சி 14.90%

தங்க நகை கடன் மதிப்பு 2025 ஜனவரி ரூ. 1.75 லட்சம் கோடி 2026 ஜனவரி ரூ. 4.00 லட்சம் கோடி வளர்ச்சி 128.80%

கடன் வளர்ச்சி வாகன கடன்: 17% வீட்டுக் கடன் 11% உணவு கடன் 60% உணவு அல்லாத கடன் 14.40%

Source link