நமது நிருபர்தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 03) நீங்கள்

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 03) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

* டில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. தெலுங்குதேசம், ஜேடியூ, சிவசேனா, லோக் ஜனசக்தி, ம.ஜ.த உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றன.

* பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்தது. இதற்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இன்று மேலும் அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளது.

* பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான முக்கிய விவாதம் நடைபெற உள்ளது.

* பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் எலிமினேட்டர் இன்று குஜராத் மாநிலம் வதோராவில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. குஜராத்- டில்லி அணிகள் மோதுகின்றன.

* உலக கோப்பை (19 வயது) கிரிக்கெட் முதல் அரையிறுதி போட்டி இன்று மதியம் 1 மணிக்கு நடக்கிறது. மோதும் அணிகள்: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து. இடம்: ஜிம்பாப்வே.

Source link