சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சட்டத்தை மீறிய வழக்கில் ‘பினோ பேமெண்ட்ஸ்’ வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ரிஷி குப்தா கைது செய்யப்பட்டதாக அவ்வங்கி தெரிவித்து உள்ளது.
இதையடுத்து நடைபெற்ற வங்கியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டத்தில் வங்கியின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தலைமை நிதி அலுவலர் கேதன் மெர்ச்சன்ட் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விசாரணை வங்கியின் வணிக கூட்டாளிகள் தொடர்பானது. தேவையான அனைத்து தகவல்களையும் வழங்க வங்கி அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருகிறது. என்றும், வங்கி அதிகாரிகள் யாரும் இதில் ஈடுபடவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
