ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் பதட்டம் எதிரொலி: பங்குச்சந்தைகள் சரிவு

நமது நிருபர்

ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுளில் தொடர்ந்து நீடிக்கும் போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 79,820 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 444 சரிந்து, 24,734 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு சில மணி நேரத்தில் ரூ.9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. போர் தொடர்ந்து நீடித்தால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலர் வரை உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.

Source link