மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று பூஜை செய்ய 5 பேர் கொண்ட குழுவை பூஜை செய்ய அனுமதிப்பது குறித்து அரசு தரப்பில் நாளை மறுநாள் (மார்ச் 4ம் தேதி) தெரிவிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. உத்தரவை அமல்படுத்தாமல் திமுக அரசு பிடிவாதம் காட்டியது. இதனால், ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் என்பவர், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் மீது ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார்.
கடந்த மாதம் 2ம் தேதி வழக்கு விசாரணைக் வந்த போது, மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர், கோவில் யெல் அலுவர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம் எனவும், கோர்ட்டை அவமதிக்கும் எண்ணம் இல்லை எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்தது. இதனையடுத்து கலெக்டர் மட்டும் இன்று( மார்ச் 02) ஆஜராக வேண்ம் என நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதன்படி நீதிபி முன்பு ஆஜரான கலெக்டர் பிரவீன் குமார் ஆஜர் ஆனார்.
அப்போது அவர் தரப்பில், சட்டம் ஒழுங்கு பிரச்னை சமாளிக்கவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என பதில் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, தீபத்தூணில் 5 பேர் கொண்ட குழுவை பூஜை செய்ய அனுமதிப்பது குறித்து அரசு தரப்பில் நாளை மறுநாள் (மார்ச் 4ம் தேதி) பதில் அளிக்க தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, போலீஸ் கமிஷனர், கோயில் செயல் அலுவலர் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கறிஞர் பேட்டி
வழக்கு விசாரணைக்கு பிறகு ராமரவிக்குமார் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் நிருபர்களிடம் கூறியதாவது: கார்த்திகை தீபம் அன்றே தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது தான் வழக்கு. ஆனால் கார்த்திகை தீபம் முடிந்த நிலையில், கலெக்டர் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: முழுமையாக நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். எந்தவிதமான தடையோ இடையூறோ ஏற்படுத்துவது நோக்கம் கிடையாது. உளவுத்துறையினர் கொடுத்த தகவல்களும், மதுரை போலீஸ் கமிஷனர் கூறியதன் அடிப்படையில் சூழ்நிலையும், சந்தர்பமும் அப்படி இருந்தது. அதனால் தான் 144 தடை உத்தரவு பிறப்பித்தோம். இல்லையென்றால் உத்தரவை அமல்படுத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. முதல் ஆளாக நின்று இந்த உத்தரவை நிறைவேற்றி இருப்பேன் எனக்கூறியிருந்தார்.
இதனையடுத்து நீதிபதி, அப்படியானால் பிரமாணப் பத்திரத்தில் சொன்னது உண்மையாக இருப்பின், உங்கள் எண்ணம், நீதிமன்ற உத்தரவை முழுமையாக மதிப்பதாக இருந்தால், அதை காண்பிக்கும் வண்ணம், இப்போது நான் சொல்லக்கூடிய இந்த செயலை செய்ய நீங்கள் தயாரா எனக்கேட்டார்.
அதற்கு கலெக்டர் மவுனம் காத்தார்.
உடனே நீதிபதி,ஏன் பதில் சொல்லாமல் மவுனம் காக்கின்றீர்கள் என கேட்கும் போது,
அதற்கு கலெக்டர் ,’ இல்லை நான் உயர் அதிகாரியிடம் கேட்க வேண்டும். மாவட்டம் தான் எனது கட்டுப்பாட்டில் உள்ளது. மாநிலம் இல்லை.உயர் அதிகாரிகளிடம் கேட்க வேண்டும்’ என விளக்கம் அளித்தார்.
நீதிபதி பதிவு
இதற்கு நீதிபதி, அப்போது நீங்கள் பிரமாணப் பத்திரத்தில் கூறியதற்கும், இப்போது சொல்லக்கூடிய வாசகத்துக்கும் முற்றிலும் வேறுபாடாக இருக்கிறதே. அன்றைக்கு 144 தடை உத்தரவு போடுவதற்கு சந்தர்பம், சூழ்நிலையும் காரணம் என்று சொன்னால் இன்று அந்த சூழ்நிலை இல்லை. அப்போதுஏன் முன்னெடுக்க மாட்டேன் என்கிறீர்கள் எனக்கேட்டபோது,
அதற்கு கலெக்டர் எனக்கு அதிகாரம் இல்லை. அறநிலையத்துறை தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பதில் சொன்னார். இது அனைத்தையும் நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
இது குறித்துமுடிவு செய்ய சம்பந்தப்பட்ட அனைவரும் நாளை மறுநாள் 4:30 மணிக்கு ஆஜராக வேண்டும் என கூறினார். விளக்கு கொடுத்து இருந்தாலும் இந்த விஷயம் குறித்து கருத்து கேட்டு உத்தரவு பிறப்பிக்க போலீஸ் கமிஷனர், இணை கமிஷனர் இனிகோ திவ்யன், கோவில் செயல் அலுவலர் யக்ன நாராயணன், கோவல் அறங்காவலர்கள் ஆஜராக வேண்டும் எனக்கூறியுள்ளார்.
கோவில் சொத்து
5 நபரை அனுப்ப முடியுமா என நீதிபதி கேட்டபோது தயக்கம் காட்டிய கலெக்டர், அறநிலையத்துறைதான் முடிவு எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு, கோவில் சொத்து அனைத்தும் அறநிலையத்துறை சார்ந்தது கிடையாது. அது தவறான புரிதல், கோவிலை சார்ந்ததுதான். தீபம் ஏற்றுவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தாலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டு இருந்தாலும், இந்த உத்தரவு அத்துடன் நிற்கவில்லை. கோவில் சொத்துகளை பராமரிக்கவும் தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.
கோவில் சொத்து அறநிலையத்துறை தலையீட்டில் கீழ் முடிவெடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதற்காக அறங்காவலர்கள் ஆஜராக உத்தரவிட்டு உள்ளார். கோவில் நடக்கும் விஷயங்களை முடிவு அவர்கள் தான் எடுப்பார்கள்.
அனைத்து விசாரணையின்போது போதும் அரசு தரப்பு மன்னிப்பு கேட்கின்றனர். கலெக்டர் சார்பில் ஆஜரான தரப்பில் வழக்கறிஞர் கிரி கடந்த முறை தாக்கல் பிரமாண பத்திரத்தை நான் இறுதி செய்யவில்லை. சிறந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்கிறோம். தவறு என நீதிமன்றம் கருதும் பட்சத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன் என்ற விளக்கத்தை கொடுத்தார். இன்றைய சூழ்நிலையில் உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது தான் வழக்கம், வழக்கு விசாரணை நிலுவையில் இருந்ததால் உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை என்றார்.
நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் பிறப்பித்த பிறப்பித்த உத்தரவுக்கு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும். தீபத்தூணில் விளக்கு ஏற்றும் விஷயத்துக்கு இவ்வளவு தடை ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அரசு தான் இதற்கு பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.
