புதுடில்லி,அவுட்டர் நார்த் டில்லியில், நேற்று முன்தினம் இரவில், அங்கித், 20, என்பவர் கத்தியால் குத்தப்பட்டு,

புதுடில்லி,அவுட்டர் நார்த் டில்லியில், நேற்று முன்தினம் இரவில், அங்கித், 20, என்பவர் கத்தியால் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு செல்வதற்குள், அந்த நபர் இறந்து விட்டார்.

அவர் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக புராரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் மேற்கொண்ட விசாரணையில், முன் விரோதம் காரணமாக அங்கித்தை குத்திக் கொன்றது, சசி பூஷன், 22, மற்றும் சிவம், 25, என்பது தெரிந்தது.

அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த இருவரையும், உள்ளூர் மக்கள் உதவியுடன் பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரித்தனர்.

இருவரும், அங்கித்தை கத்தியால் குத்திக் கொன்றதை ஒப்புக் கொண்டனர்.

அவரை கொன்ற கத்தியை அங்கிருந்த குப்பை மேட்டில் இருந்து கைப்பற்றிய போலீசார், மேற்கொண்டு விசாரித்து, இருவரையும் கைது செய்தனர்.

மது அருந்தும் போது ஏற்பட்ட பிரச்னையில், அங்கித்தை அவர்கள் இருவரும் சேர்ந்து, கத்தியால் குத்தி கொன்றனர் என்பதை இருவரும் ஒப்புக் கொண்டனர்.

Source link