உங்களுக்கு, வாக்கியப்படி மார்ச்-6 அன்று நிகழவுள்ள சனிப் பெயர்ச்சியில் ராசிக்கு 6-ல் அமர்ந்து பலன் தரப் போகிறார் சனி பகவான். அதனால் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன… ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த பலன்கள் உங்களுக்காக!

இந்த ராசியின் அடையாளம் தராசு. இந்த ராசியில் சனி உச்சனாக இருப்பார். சூரியன் நீசம் பெறுவார். மென்மையான அணுகு முறை, சுயமரியாதை, செல்வாக்கைக் காப்பதில் தனிக் கவனம், நல்ல மனம், ஈவு – இரக்கம், பரோபகாரக் குணம், செல்வகடாட்சம் பெறும் அமைப்பு உங்களுக்கு உண்டு.

துலாம் ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்:
1. உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, 6-ல் அமரும் சனி பகவான், விபரீத ராஜயோகத்தை அள்ளித் தரப் போகிறார். வாழ்க்கையே மாறும். முக்கியமான காரியங்களைப் பக்குவமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.
2. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வாழ்க்கைத் துணைவர் உறுதுணையாக இருப்பார். பிள்ளை வரத்தை எதிர்நோக்கியுள்ள அன்பர்களுக்கு, அந்த வரம் கிடைக்கும். மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள்.
3. சனி பகவான் பூரட்டாதியில் பயணிக்கும் காலத்தில், பழைய கடன் தீரும். வீடு கட்ட கடனுதவி கிடைக்கும். எனினும் சமூக வலைத்தளங்களைக் கவனமாகக் கையாளுங்கள். வாகனங்களைச் சரியானமுறையில் பராமரியுங்கள்.
4. சனி உத்திரட்டாதியில் பயணிக்கும் காலமான 2.04.2026 முதல் 14.4.2027 வரையிலான காலம் சாதகமாகும். திடீர் பணவரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். திருமணம், குழந்தைப் பாக்கியம் உண்டு. சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

5. அதேபோல் 14.4.2027 முதல் 24.4.2028 வரை சேமிப்புகள் அதிகரிக்கும் காலமாகும். விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். ஒரு சிலர் வெளிநாட்டுக்குச் சென்று வருவார்கள்.
6. சனி பகவான் 28.7.2027 முதல் 13.12.2027 வரை வக்ரத்தில் செல்வதால், வாகனத்தைக் கவனமாக இயக்கப்பாருங்கள். முன்கோபம் வேண்டாம்.
7 உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை சனி பார்ப்பதால், தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். 12-ம் வீட்டைப் பார்ப்பதால், திடீர் பணவரவு உண்டு. உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
8. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்குக் குடும்பத்தில் நல்லது நடக்கும். தாம்பத்தியம் இனிக்கும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு உயர்ந்த பொறுப்புகள் தேடி வரும். தாய்வழி உறவினர்களுடன் மனக் கசப்புகள் நீங்கும். பூர்விகச் சொத்து கைக்கு வரும்.
9. பொதுவாகவே இந்த ராசியினருக்குப் பல்வேறு பிரச்னைகளுக் குமான தீர்வுகள் உண்டாகும் காலம் இது. வழக்குகள் சாதகமாகும். தடைப்பட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.
10. வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களிடையே அனுசரித்துப் போவீர்கள். ரியல் எஸ்டேட், உணவு, புரோக்கரேஜ் வகைகளால் லாபம் அடைவீர்கள்.
11. உத்தியோகத்தில், உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரி பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். ஒருசிலர், அதிகச் சம்பளத்துடன் நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் உண்டு. கணினித் துறையில் இருப்பவர்களுக்கு, அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனங் களில் நல்ல சம்பளத்துடன் வாய்ப்பு கிடைக்கும்.
