சென்னை : சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில், த.வெ.க., தலைவர் விஜய், நடிகை திரிஷா ஆகியோர், ஒன்றாக ஒரே வண்ண ஆடையில் பங்கேற்றது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜயின் மனைவி சங்கீதா, விவகாரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், தன் கணவர் விஜய், நடிகை ஒருவரிடம் திருமணம் தாண்டிய உறவில் இருக்கிறார் என்று, குற்றம் சாட்டி உள்ளார். இந்த மனு, அடுத்த மாதம் விசாரணைக்கு வர உள்ளது. இந்த விவகாரம், கடந்த வாரம் அரசியல் வட்டாரத்தில், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்ல திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில், விஜய் பட்டு வேஷ்டி சட்டை அணிந்தும், திரிஷா அதே நிறத்தில் சேலை அணிந்து, ஒன்றாக பங்கேற்றனர். இருவரும் ஒன்றாக, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘வீடியோ’, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
