நாடு முழுவதும் காலியாக இருக்கும் 37 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

நாடு முழுவதும் காலியாக இருக்கும் 37 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஐந்து ராஜ்யசபா ‘சீட்’களுக்கு, ஆளும் திரிணமுல் காங்., மற்றும் பா.ஜ., சார்பில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றில், திரிணமுல் காங்., கட்சி சார்பில், மாநில அமைச்சர் பபுல் சுப்ரியோ, மேற்கு வங்க மாநில முன்னாள் டி.ஜி.பி., ராஜீவ் குமார், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மேனகா குருஸ்வாமி மற்றும் நடிகர் கோயல் மாலிக் ஆகியோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். பா.ஜ., சார்பில், கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ராகுல் சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Source link