ரூ.1 லட்சம் கோடி பங்குகள் விற்பனை: அன்னிய முதலீட்டாளர்கள் 'எஸ்கேப்'

ஆசிய பங்குச் சந்தைகளில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் தங்கள் பணத்தை வெளியே எடுத்து வருகின்றனர். ‘புளூம்பெர்க்’ வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, கடந்த வாரம் மட்டும், சீனாவை தவிர்த்து வளர்ந்து வரும் ஆசிய சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இது, கடந்த 2022 மார்ச் மாதத்துக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வெளியேற்றமாகும்.

எந்தெந்த நாடுகளில் எவ்வளவு? தைவான்: ரூ.72,443 கோடி தென்கொரியா: ரூ.14,672 கோடி இந்தியா: ரூ.11,921 கோடி

காரணங்கள்  ஈரான் போர் பதற்றத்தால் முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாமல், மீண்டும் பாதுகாப்பான இடமாக கருதப்படும் அமெரிக்க டாலர், பாண்டு மற்றும் தங்கம் நோக்கி திரும்புகின்றனர்  போர் நீடித்தால் எரிபொருள் விலை உயர்ந்து, ஆசிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் நிறுவனங்களின் லாபம் குறையும் என அஞ்சுகின்றனர்  கடந்த சில மாதங்களாக ஆசிய பங்குகள் நல்ல லாபத்தை கொடுத்திருந்த நிலையில், போரை காரணமாக வைத்து முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுகின்றனர்.

Source link