தமிழக அரசியலுக்கு புதிதாக ஒரு தலைவர் வந்துள்ளார். தனி மனித ஒழுக்கமே இல்லை. நமக்கென்று ஒரு கலாசாரம் உள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி, திருமணம் முடிந்ததும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். இந்த கலாசாரத்தைப் பற்றி, அந்த நபர் கொஞ்சம் கூட கவலையில்லாமல் இருக்கிறார்.
எதிர்கால தலைவராக வரக்கூடியவர், இளைஞர்களை நல்வழிப்படுத்தக்கூடிய தலைவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல், வெறுமெனே கூட்டம் கூடட்டும்; நமக்கு ஆரவாரம் செய்யட்டும் என்று வழிநடத்து கிறார். அப்படிப்பட்டோரிடம் சிக்கித் தவிப்போரை நாம் தான் காப்பாற்ற வேண்டும்.
– கீதா ஜீவன், தமிழக அமைச்சர், தி.மு.க.,
