அமெரிக்கா, இஸ்ரேல் கடும் தாக்குதல்களால் ஈரான் பணிந்துவிட்டது; டிரம்ப் அறிவிப்பு

நியூயார்க்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் தாக்குதல் எதிரொலியாக ஈரான் பணிந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அரபு நாடுகளை இனி தாக்க மாட்டோம் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் தமது ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறி உள்ளதாவது;

தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வரும் ஈரான், மத்திய கிழக்கு நாடுகளிடம் மன்னிப்பு கேட்டு சரண் அடைந்துள்ளது. இனி அந்நாடுகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் தாக்குதல் எதிரொலியாக தான் இந்த அறிவிப்பு வெளி வந்து இருக்கிறது.

ஈரான், மத்திய கிழக்கு நாடுகளை ஆட்சி செய்ய விரும்பியது. ஆனால் சுற்றியுள்ள நாடுகளிடம் இப்போது தோற்றுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் இப்படி நடந்திருப்பது இதுவே முதல்முறை. ஈரான் சரண் அடையும் வரை மிகவும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்.

இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.

Source link