ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துங்கள்; லண்டனில் அமெரிக்க தூதரகம் நோக்கி 5000 பேர் பேரணி

லண்டன்; ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக்கோரி லண்டனில் 5000 பேர் பேரணி சென்றனர்.

ஈரானுக்கு எதிரான தங்களின் தாக்குதல்களை அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறுத்துவதாக இல்லை. தினம்தோறும் அதிகளவு ஏவுகணைகளை செலுத்தி தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. நிபந்தனையற்ற மன்னிப்பு மற்றும் சரண் ஒன்றே இதற்கு தீர்வு என்று அமெரிக்கா அறிவித்துவிட்டது.

போர் மேலும் பல நாட்கள் நீடிக்கும் என்று சூழல் காணப்படும் தருணத்தில், இந்த போரை நிறுத்த வேண்டும் என்று கூறி லண்டனில் ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்று உள்ளனர். இந்த பேரணியானது, மில்பாங்க் என்ற இடத்தில் இருந்து வோக்ஸ்ஹாலில் உள்ள அமெரிக்க துரதகம் நோக்கி சென்றது.

பிரமாண்ட பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், இந்த போரை உடனடியாக நிறுத்துங்கள் என்று முழக்கமிட்டபடியே சாலைகளில் சென்றனர்.

இந்த பேரணியில் சுமார் 5000 பேர் முதல் 6000 பேர் கலந்து கொண்டதாக லண்டன் போலீசார் கூறி உள்ளனர். முன்னதாக பேரணிக்காக அங்கு கூடிய போராட்டக்காரர்கள் ஏராளமான சிறு, சிறு கூடாரங்களை அமைத்து அங்கேயே சிலமணி நேரங்கள் தங்கி இருந்தனர்.

Source link