கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ”10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலையில்லாமல் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு, மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்,” என, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மகளிர் தின பரிசு
மே ற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு தமிழகத்துடன் சேர்த்து விரைவில் தேர்தல் நடக்க உள் ளது.
தலை நகர் கொல்கட்டாவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், தேர்தல் கமிஷன் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, முதல்வர் மம்தா நடத்தி வரும் தர்ணா, இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
இதில், முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய தாவது:
மேற்கு வங்கத்தில், 21 – 40 வயதுக்குட்பட்ட, 10ம் வகுப்பு தேர்ச்சி பெ ற்று வேலையில்லாமல் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு, அவர்கள் சுயசார்புடன் முன்னேற உதவும் வகையில் மாதம், 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தை உண்மையில், ஏப்., 1ல் துவக்க திட்டமிட்டிருந்தோம்.
ஆனால், சர்வதேச மகளிர் தின பரிசாக உடனடியாக அமல் படுத்துகிறோம்.
கல்வி உதவித்தொகை தவிர வேறு எந்த அரசு திட்டங்களின் பலன்களையும் பெறாத, 1 கோடி பேர் இத்திட்டம் மூலம் பயனடைவர். மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம், 40 சதவீதம் குறைந்துள்ளது. ‘உத்கர்ஷ பங்களா’ திட்டம் மூலம், 40 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளித்துள்ளோம்.
1 லட்சம் பேர்
அதி ல், 10 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. விவசாயிகளுக்கு மாதம், 10,000 ரூபாய் வழங்கி வருகிறோம். நிலமற்ற விவசாயிகளுக்கு, 4,000 ரூபாய் உதவித்தொகை அ றிவிக்கப்பட்டு உள்ளது.
ஐ.டி., துறையில் பெங்களூரை விட இங்கு அதிக மக்கள் பணிபுரிகின்றனர். 200 புதிய நிறுவனங்கள் இங்கு வந்துள்ளன. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில், மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது.
பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் மூலம், 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். அடுத்த 100 ஆண்டுகளுக்கு மின் தட்டுப்பாடு இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
