வரவேற்புரை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு,
“டெல்டாவே உங்களுக்குச் சொந்தம். ஆணையயிடுங்கள். வென்று காட்டுகிறோம்” என்று பேசினார்.
6.50 மணிக்கு மைக்கைப் பிடித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
அதன்பிறகு, “தி.மு.க இதுவரை 12 மாநில மாநாடுகளை நடத்தியுள்ளது. இதில் 1956, 1990, 1996, 2006, 2014, 2021, 2026 என 7 மாநாடுகள் திருச்சியில்தான் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டு அணிக்கும், அ.தி.மு.க அணிக்கும் இடையில் தான் ஸாரி, அ.தி.முக அணி என்று அழைத்தால் மோடியும், அமித்ஷாவும் கோபித்துக்கொள்வார்கள்.
தி.மு.க-வுக்கும், என்.டி.ஏ கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி. அதுவும், தமிழ்நாட்டு அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையில்தான் போட்டி. பா.ஜ.க எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் காவி அடிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் உங்கள் பாட்ஷா பலிக்காது. தமிழ்நாடு உங்களுக்கு எப்போதும் அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான். மீண்டும் வெல்வோம்.
