புதுச்சேரி: `ஹோட்டல்னு நினைச்சி தூங்கிட்டேன்’- ஆளுநரை அலற வைத்த போதை இளைஞர்; பல் இளித்த பாதுகாப்பு

இவர்கள் தூங்கிய அறைக்குப் பக்கத்து அறையில் ஆளுநர் மகன் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது பக்கத்து அறையில் கேட்ட பேச்சு சத்தத்தில் எழுந்த அவர், அந்த அறைக் கதவை திறந்து பார்த்திருக்கிறார். அங்கு போதையில் தூங்கிக் கொண்டிருந்த அந்த நபரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரை அழைத்து அவர் யார் என்று கேட்டிருக்கிறார். அதிர்ந்து போன போலீஸார், அந்த நபரை எழுப்பி விசாரித்திருக்கிறார்கள். ஆனால் மது போதையில் இருந்த அவரால் சரியாக பேச முடியவில்லை. இந்த கலகலப்பில் ஆளுநர் கைலாஷ்நாதனும் அங்கு வந்துவிட்டிருக்கிறார்.

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்

அதனால் அவரை அலேக்காக தூக்கிய போலீஸார், முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போதையை `தெளிய’ வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு விரைந்து சென்ற காவல்துறை உயரதிகாரிகள், அந்த நபரிடம் விசாரணை செய்திருக்கின்றனர். அப்போது, `நானும் என் ஃபிரண்டும்தான் நைட் அந்த இடத்தைப் பார்த்தோம். ஹோட்டல் மாதிரி இருந்ததால் உள்ளே போய் படுத்து தூங்கிட்டோம். என்னுடன் வந்த என் ஃபிரண்ட் மறுபடியும் சுவர் ஏறி குதித்து வெளியில் போயிட்டான். உண்மையாவே நாங்க தூங்கத்தான் போனோம்’ என்று கூலாக கூறியிருக்கிறார் அந்த போதை நபர்.

`உங்க போதைக்கு எங்களை ஊறுகாயா மாத்திட்டீங்களேடா…’ என்று புலம்பி வருகின்றனர் புதுச்சேரி போலீஸார்.

Source link